twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலுவுடன் சமரசத்துக்கு தயார்: சிங்கமுத்து

    By Staff
    |

    Singamuthu
    நடிகர் வடிவேலுவுடன் சமதானமாக போக நான் தயார். அவர்தான் சமாதானத்துக்கு முன்வர வேண்டும் என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து. இவர் வடிவேலுவுக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, அரசுப் புறம்போக்கு இடம் மற்றும் சுடுகாட்டு நிலத்தை மோசடியாக விற்று ரூ.7 கோடி வரை ஏமாற்றி விட்டாராம். இதுபற்றி கேட்டபோது வடிவேலுவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம் சிங்கமுத்து.

    எனவே சில தினங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து இதுகுறித்த ஆதாரங்களுடன் புகார் தந்தார் வடிவேலு.

    இந்த புகார் தொடர்பாக சிங்கமுத்துவை போலீசார் தேடினார். ஆனால் அவரோ சில பலமான மனிதர்கள் மற்றும் சாதி அமைப்புகளின் துணையுடன் வடிவேலுவை பதிலுக்கு மிரட்டி வந்தாராம்.

    சென்னையிலேயே பதுங்கி இருந்தபடி, முன் ஜாமீனும் பெற்றுவிட்டார்.

    இன்னொரு பக்கம் வடிவேலுவுடன் சமாதானம் பேசவும் முயன்று வந்தாராம். வடிவேலுவை பலமுறை தொடர்பு கொண்டு சிங்கமுத்து சார்பில் சமாதானத்துக்கு சிலர் அழைத்துள்ளனர்.

    இதனால் கடுப்பான வடிவேலு, சில தினங்களுக்கு முன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது இரு வழக்குகள் தொடர்ந்தார்.

    இந் நிலையில். இந்த வழக்கில் நிபந்தனையுடனான முன்ஜாமீன் பெற்ற சிங்கமுத்து சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசில் இன்று கையெழுத்திட வந்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம், 'நடிகர் வடிவேலு முன்வந்தால் அவருடன் சமாதானமாகப் போகத் தயாராக இருக்கிறேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லை' என்றார்.

    ஏபிசிடி எழுதிக் காட்டச் சொன்ன போலீஸ்:

    மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இன்று சிங்கமுத்துவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஏபிசிடி எழுதிக் காட்டச் சொன்னார்கள். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றைக் காட்டி அதில் உள்ள சில வரிகளை எழுதிக் காட்டவும் கூறினர். மேலும் வடிவேலு புகார் தொடர்பாகவும் விசாரணை நடந்தது. விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது.

    முன்ஜாமீன் நிபந்தனைப்படி இன்று மத்திய குற்றப் பிரிவு போலீஸில் ஆஜரான சிங்கமுத்து இன்ஸ்பெக்டர் மைனர்சாமி முன்னிலையில் கையெழுத்து போட்டார்.

    அரிசி மண்டியில் வேலை பார்த்தேன்...

    போலீஸ் விசாரணையின்போது அவர் கூறுகையில்
    எனது முதல் படம் மண்ணுக்குள் வைரம் அதில் சிறிய வேடத்தில் நடித்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் அரிசி மண்டியில் வேலை பார்த்தேன். வடிவேலுவுடன் அறிமுகம் ஏற்பட்ட பின்னர் நானும், அவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தோம். முடிச்சூர் ரோட்டில் ராமச்சந்திரன் என்பவரது வாரிசு பிரபுவிடம் இருந்து இடம் வாங்க வடிவேலு நினைத்தார்.

    நான் புரோக்கர் அல்ல...

    எனது பெயரில் பவர் கொடுக்கப்பட்டு அவர் மானேஜர் வேலுச்சாமி மூலமாக நிலமும் வாங்கப்பட்டது. இந்த ஒரு நிலம் மட்டும்தான் என் மூலம் வாங்கப்பட்டது. வடிவேலு விரும்பியதால்தான் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். நான் நிலம் வாங்கி விற்பனை செய்பவன் அல்ல என்று கூறியதாக தெரிகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X