Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மோசடி புகார்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சென்னையில் கைது!
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சில்லர் கல்யாண். இவர், தெலுங்கு பட உலகில் பிரபல தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு படங்களின் வீடியோ உரிமைகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
கல்யாண் மீது தெலுங்கு பட உலகின் வீடியோ உரிமை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஆந்திரா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது நிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலங்களையெல்லாம் இவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் புகார் உள்ளது.
பிரபல தாதா சூரி கொலை வழக்கில் தொடர்புடைய பானு கிரணுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திரா போலீசார் இவரை தேடி வந்தனர். ஆனால் பட அதிபர் கல்யாண், சென்னை தியாகராயநகரில் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி பதுங்கியிருப்பதாக ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நேற்று முன்தினம் ஆந்திரா போலீசார் சென்னை வந்து பட அதிபர் கல்யாணை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, உரிய அனுமதி பெற்று ஆந்திரா அழைத்து சென்றனர். கல்யாண் கைது செய்யப்பட்டது தெலுங்கு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.