Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கேரளாவில் சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக்
மலையாளத் திரையுலகைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தாமதம் செய்து வருவதைக் கண்டித்து நேற்று கேரளாவில் தியேட்டர் உரி்மையாளர்கள் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் செய்தனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக 49 ஊர்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 210 தியேட்டர்கள் மூடிக் கிடந்தன.
இந்த ஸ்டிரைக் முழுமையாக நடந்ததாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சி.பாபி கூறினார்.
மலையாளத் திரையுலகைக் காக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர் டி.பாலகிருஷ்ணன் அரசுக்குப் பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதை அமல்படுத்தாமல் அரசு தாமதம் செய்து வருகிறது. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையிடப்படும்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் அரசு ஆகிய நால்வருக்குமே நல்ல லாபம் கிடைக்கும் என்றார் பாபி.