பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு கோர்ட்டில் ஆஜர்

By Staff

Prasanth with Grahalakshmi
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரசாந்த், அவரது மனைவி கிரகலட்சுமி, கிரகலட்சுமியின் முதல் கணவர் வேணுபிரசாத் நாராயணன் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிரகலட்சுமி தனக்கு முன்பாகவே வேணு பிரசாத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார். எனவே தனது கல்யாணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதே கோர்ட்டில், கிரகலட்சுமியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி வேணு பிரசாத் நாராயணனும் மனு செய்துள்ளார்.

இரு வழக்குகளும் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு பிரசாத் ஆகியோர் ஆஜரானார்கள்.

ஒரே நேரத்தில் ஒரே கோர்ட்டில் மூன்று பேரும் ஆஜரானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீதிபதி இரு வழக்குகளையும் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X