twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நலமுடன் உள்ளார் மனோராமா - மருத்துவர்கள்

    By Shankar
    |

    சென்னை: தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நடிகை மனோரமா, சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் உடல் சோர்வு காரணமாக குளியலறையில் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந் நிலையில், கடந்த வாரம் அவருக்கு தலை வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மனோரமாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், "மனோரமாவுக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரண்டு நாள்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுவிடுவார்," என்றனர்.

    English summary
    After a surgery in head, veteran actress Manorama recovering fast. She is now in ICU and her doctors say that she would shifted to normal ward soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X