Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தப்சி டிமிக்கி... மோகன்பாபு 'கடுகடு'!
ஆடுகளம் நாயகி தப்சி மீது பயங்கர கடுப்பிலிருக்கிறார் தெலுங்கு நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன்பாபு.
தமிழுக்கு வரும் முன்பே தெலுங்கில் பிஸியாக அறிமுகமானவர் தப்சி. அப்போதே, ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் கால்ஷீட்டில் சொதப்பல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடுகளத்தில் நடித்த பிறகு, கால்ஷீட் விஷயத்தில் தாறுமாறாக உள்ளதாம் தப்சியின் போக்கு.
ஒரு படத்துக்கு கொடுத்துள்ள தேதிகளை வேறு படங்களுக்கு மாற்றி கொடுத்து தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றுகிறாரம். தெலுங்கு முன்னணி நடிகர் மோகன்பாபு மகனுக்கு ஜோடியாக நடிக்க கடந்த ஜனவரி மாதம் தேதி ஒதுக்கியுள்ளார் தப்சி.
ஆனால் படப்பிடிப்புக்கு அழைத்த போது வரவில்லை. அந்த தேதிகளை ஒரு இந்திப் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம்.
ஆந்திராவில் மோகன்பாபுவின் அதிரடி ரொம்பவே பிரபலம். முதலில் முறையாக புகார் கொடுத்துவிட்டு, அடுத்து சம்பந்தப்பட்ட நடிகை ஹைதராபாதில் கால் வைக்க முடியாத அளவுக்கு எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவர் மோகன்பாபு.
இப்போது முதல் கட்டமாக தெலுங்கு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் தப்சி மீது புகார் கொடுத்துள்ளார் மோகன்பாபு. அடுத்து..?!