Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகனைக் கடத்தியதாக கணவர் மீது பாடகர் திப்பு தங்கை புகார்
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமாக இருப்பவர் பின்னணி பாடகர் திப்பு. இவரது மனைவி பிரபல பாடகி ஹரிணி. காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வீடு ஆழ்வார் திருநகர், திலகர் தெருவில் இருக்கிறது.
இவர்களோடு கணவரை பிரிந்து வாழும் திப்புவின் தங்கை காயத்ரி தனது 7 வயது மகன் அருனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் குழந்தை அருணை தனது கணவர் கடத்தி சென்றுவிட்டதாக காயத்ரி வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். அதோடு நிற்காமல் தென் சென்னை இணை கமிஷ்னர் சக்திவேலையும் பார்த்து புகார் கொடுத்தார். அவருடன் பாடகர் திப்புவும் வந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வடபழனி உதவி கமிஷ்னர் மனோகரன், காயத்ரியின் கணவர் ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் தனது குழந்தையை தான் அழைத்து சென்றதாக தெரிவித்தார். மேலும், மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் தரப்பில் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதில் இருவரும் உடன்படவே குழந்தையுடன், கணவனும், மனைவியும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றனர்.