Don't Miss!
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
திருட்டு விசிடியால் தொழில் போச்சு-வினியோகஸ்தர்கள்
இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட வினியோகஸ்தரர்கள் நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரனிடம் அளித்துள்ள புகாரில்,
நெல்லையில் 100க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் உள்ளனர். திருட்டு சிடிக்களால் வினியோகஸ்தர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் பகுதிகளில் பல கடைகளில் புதிய பட சிடிக்கள் திருட்டு தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சிங்கம், சுறா, அங்காடி தெரு, கோரிப்பாளையம் போன்ற படங்களின் திருட்டி சிடிக்கள் விற்பனையை ஆதாரபூர்வமாக கண்டறிந்துள்ளோம். இதுபோல் திருட்டு சிடிக்கள் சந்தையில் விற்கப்பட்டால் மிகப்பெரிய தொழில் பாதிப்பு ஏற்படும்.
திருட்டு சிடிக்கள் தயாரிக்கப்படுவதால் பல கோடி ரூபாய் முதலீடு செய்து திரைப்படத்தை வாங்கிய வினியோகஸ்தரர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே திருட்டு சிடிக்கள் விற்பனையை அடியோடு ஓழிக்கவும், தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.