Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எங்கே நடிகை ரஞ்சிதா?
நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தரும் சல்லாபிக்கும் காட்சிகள் முழுவதுமாக வெளிவந்து ஆன்மிக உலகையே புரட்டிப் போட்டுவிட்டது.
இந் நிலையில் பல லட்சம் பக்தர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த சாமியாரையும் காணவில்லை, அவரை மேலே விழுந்து புரண்டு சபலத்தில் தள்ளிய ரஞ்சிதாவையும் காணவில்லை.
ரஞ்சிதாவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன. சாலிகிராமம் வீட்டில்தான் இவர் முதலில் குடியிருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட கையோடு அந்த வீட்டை பூட்டிவிட்டு திநகரில் இன்னொரு பெரிய வீட்டுக்குக் குடியேறிவிட்டார். ஆனால் அவர் கணவர் ரஞ்சிதாவைப் பிரிந்து ராஜஸ்தானுக்குப் போய்விட்டார்.
சாலிகிராமம் வீட்டின் மேல் பகுதியை ஒரு இயக்குநருக்கும் கீழ் பகுதியை ஒரு தயாரிப்பாளருக்கும் வாடகைக்கு விட்டுவிட்டாராம்.
இந்த வீட்டைப் பிடிப்பதில் பெரும் போட்டியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்போது ரஞ்சிதா விவகாரம் வீதிக்கு வந்துவிட, அவரைத் தேடி வீட்டுக்குப் போனால் பெரிய பூட்டு தொங்குகிறது. செல்பேசி மற்றும் வீட்டு எண் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாமியாருடன் ஓட்டமா?
நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.