Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எங்கே நடிகை ரஞ்சிதா?
நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தரும் சல்லாபிக்கும் காட்சிகள் முழுவதுமாக வெளிவந்து ஆன்மிக உலகையே புரட்டிப் போட்டுவிட்டது.
இந் நிலையில் பல லட்சம் பக்தர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த சாமியாரையும் காணவில்லை, அவரை மேலே விழுந்து புரண்டு சபலத்தில் தள்ளிய ரஞ்சிதாவையும் காணவில்லை.
ரஞ்சிதாவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன. சாலிகிராமம் வீட்டில்தான் இவர் முதலில் குடியிருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட கையோடு அந்த வீட்டை பூட்டிவிட்டு திநகரில் இன்னொரு பெரிய வீட்டுக்குக் குடியேறிவிட்டார். ஆனால் அவர் கணவர் ரஞ்சிதாவைப் பிரிந்து ராஜஸ்தானுக்குப் போய்விட்டார்.
சாலிகிராமம் வீட்டின் மேல் பகுதியை ஒரு இயக்குநருக்கும் கீழ் பகுதியை ஒரு தயாரிப்பாளருக்கும் வாடகைக்கு விட்டுவிட்டாராம்.
இந்த வீட்டைப் பிடிப்பதில் பெரும் போட்டியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்போது ரஞ்சிதா விவகாரம் வீதிக்கு வந்துவிட, அவரைத் தேடி வீட்டுக்குப் போனால் பெரிய பூட்டு தொங்குகிறது. செல்பேசி மற்றும் வீட்டு எண் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாமியாருடன் ஓட்டமா?
நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.