Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மேட்டூர் கோர்ட்டில் ஆஜராக நடிகை குஷ்புவுக்கு உத்தரவு!
தமிழக பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு இழிவாக பேசியதாக அவர் மீது மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் கடந்த 2005 நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்-2) வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டன.
இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 40 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்புவை நேரில் அழைத்து விசாரிக்கவேண்டும் என்று அரசு வக்கீல் கார்த்திகேயன் கூறினார்
கடந்த மாதம் (ஜுலை) 7-ந் தேதி இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் ஆகஸ்டு 4-ந் தேதிக்குள் (நேற்று) நடிகை குஷ்பு கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் நடிகை குஷ்பு நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த மாதம் 25-ந் தேதிக்குள் நடிகை குஷ்பு, கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார்.