Don't Miss!
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு
முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை மரியாதைநிமித்தமாக பலரும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கெளதமி, மகள் சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதேபோல நடிகர் விஜய், பிரபு ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
3வது முறையாக தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவை, நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சித்தப்பா மகன் கிரி சண்முகம் மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சம்பந்தி மதிவாணன் மற்றும் அவரது மனைவி, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற பி.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து, நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டியமைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.