எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தேவ் ஆனந்த்-கருணாநிதி

தேவ் ஆனந்த் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
திரைப்பட உலகில் பல ஆண்டுகள் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய தேவ் ஆனந்த் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகப்பெரிய நடிகராக அவர் வலம் வந்த போதிலும், எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக விளங்கியவர்.
அவர் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











