twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைனான்சியரை தாக்கிய வழக்கு- புவனேஸ்வரி ஹைதராபாத் ஓட்டம்?

    By Sudha
    |

    சென்னையில் பைனான்சியர் அசோக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி அவரது வீட்டில் இல்லை. அவர் ஹைதராபாத்துக்குப் போய் விட்டார். அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தன்னிடம் நடிகை புவனேஸ்வரி வாடகைக்கு கார் வாங்கியதாகவும், பின்னர் வாடகையும் கொடுக்காமல், காரையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வருவதாகவும், இதைக் கேட்டபோது தன்னை மிரட்டியதாகவும் கூறி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் மீது திடீரென தாக்குதல் நடந்தது. இதையடுத்து பாண்டி பஜார் போலீஸில் இன்னொரு புகார் கொடுத்தார் அசோக்குமார். அதில் புவனேஸ்வரிதான் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கையும் பதிவு செய்தது போலீஸ்.

    இதுகுறித்து விசாரிக்க புவனேஸ்வரியைத் தேடி போலீஸார் போனார்களாம். ஆனால் அவர் இல்லையாம். ஹைதராபாத் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதாம். இதனால் அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படுமாம்.

    English summary
    Chennai Police will grill Actress Buvaneswari after she returned from from Hyderabad. She has been booked in threatening and attack cases.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X