Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அமீர்-சீமான் ஜாமீனை எதிர்த்து காங். வழக்கு!
மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவரான முத்துபாண்டி, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவின் அமைப்பாளராக உள்ளார். இவர் தாக்கல் செய்துள்ல ரிட் மனுவில்
தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சார்பில் இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த மாதம் 19ம் தேதி ராமேசுவரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது டைரக்டர்கள் அமீர், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசினார்கள். கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 27ம் தேதி சென்னையில் இருவரையும் கைது செய்தனர். அவர்களது ஜாமீன் மனு ராமேஸ்வரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அடுத்தநாள் ராமநாதபுரம் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு அவர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
என்ன காரணத்துக்காக ஜாமீன் வழங்கப்பட்டது என்றும் அவர் தனது உத்தரவில் கூறவில்லை. டைரக்டர்களின் பேச்சு தேச ஒற்றுமைக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் சாதாரண குற்றத்துக்காக வழங்குவது போல ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமீன் விடுதலைக்கு பிறகும் இருவரும் அதுபோலவே பேசி வருகிறார்கள். அது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இதுபோல பேசுவது நாடுகளுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.