Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாஜக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்... சிம்பு ரசிகர்கள் கைது
சிம்பு கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்ட பாஜக வினரைக் கண்டித்து, தி நகரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் சிம்புவின் ரசிகர்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சிம்பு நடித்து வெளியாகியுள்ள வானம் படத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக ஆதரவாளர்கள் சிலர், தாம்பரம் எம்ஆர் தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்தச் சம்பவம் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.
பாஜகவினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை திநகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே ஏராளமான சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிம்புவின் படத்துக்கு செருப்பு மாலை போட்டதற்காக பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.