Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கவிஞர் வாலி வெளியிட்ட 'ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து....'
ஆனால் அதே சமாச்சாரத்தை விறுவிறுப்பாக எழுதி பத்திரிகை, இணையதளம் மூலம் படிக்கத் தருவதுதான் சினிமா நிருபர்களின் வேலை.
அப்படிப்பட்ட ஒரு சினிமா நிருபரின் டைரிக் குறிப்புகள், சுவாரஸ்யமான புத்தகமாக வெளிவந்துள்ளது, "ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்" என்ற பெயரில்.
எழுதியிருப்பவர் மேஜர்தாஸன். குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகை மற்றும் இணையதளங்களில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர். கே பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், வாலி, எம்எஸ்வி என்ற பல சாதனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இவரது இயற்பெயர் தேவாதிராஜன். தன்னை எழுதவும் பத்திரிகையாளனாக வளரவும் பெரிதும் ஊக்கமளித்த மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெயரையே மேஜர்தாஸன் என மாற்றிக் கொண்டார்.
பூம்புகார் பதிப்பக வெளியீடாக வந்துள்ள "ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்" என்ற இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடந்தது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எனப்படும் பலரும் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்திப் பேசினர். கவிஞர் வாலி முதல் நூலை வெளியிட்டார். மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் எஸ்பி முத்துராமன், விசி குகநாதன், டிபி கஜேந்திரன், மூத்த நடிகைகள் மனோரமா, சாரதா, ராஜ்யஸ்ரீ, எம்என் ராஜம், சச்சு, குட்டி பத்மினி என ஏராளமானோர் விழாவுக்கு வந்திருந்தனர்.