Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் ஒரிஜினல்தான்-எப்எச்எம் விளக்கம்
எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக் முழு நீள நிர்வாண கோலத்தில் இருப்பது போலவும், தனது முன்னழகை இரு கைககளாலும் மறைத்தபடியும், தோள்பட்டையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பெயரைப் பொறித்தபடியும் அவர் காட்சி தருவதாக உள்ளது.
இந்த அட்டைப் படம் டிசம்பர் மாத பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
இது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீணா மாலிக்குக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இது மார்பிங்செய்யப்பட்ட படம், நான் இப்படி போஸ் தரவே இல்லை. இதற்காக எப்எச்எம் நிறுவனம் எனக்கு ரூ. 10 கோடி நஷ்டம் தர வேண்டும் என்று கூறி அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா மாலிக்.
ஆனால் இந்தப் படம் ஒரிஜினல்தான், மார்பிங் செய்யப்பட்டதல்ல என்று எப்எச்எம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையின் எடிட்டர் கபீர் சர்மா கூறுகையில், வீணா மாலிக்கின் புகார்கள் அபத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அவருக்கு இதுதொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதால் இப்படி மாற்றிப் பேசுகிறார் என்று கருதுகிறோம்.
அவரது புகைப்படம் அசல்தான். அதை நாங்கள் மார்பிங் செய்யவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அதேதான் இந்தப் புகைப்படத்திலும் உள்ளது. அவரது உடல் அழகு மிகவும் ஆச்சரியகரமானது, வியப்புக்குரியது. அவரது அழகு இயற்கையானது. இதனால்தான் அவரது நிர்வாணப் படத்துக்காக அவரை நாங்கள் அணுகினோம்.
இந்தப் புகைப்படம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தப் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மிகவும் தைரியம் வேண்டும். அது இருந்ததால்தான் வீணா மாலிக் போஸ் கொடுத்தார். ஆனால் தற்போது அவர் பயப்படுகிறார் என்றார் சர்மா.
வீணா மாலிக் தனது நிர்வாணப் போஸை மறுத்து பேட்டி அளித்ததுமே கபீர் சர்மா பேட்டி அளிக்கையில், வீணா நிர்வாண போஸ் கொடுத்தது உண்மைதான். இதை நிரூபிக்க அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது எடுத்த விதம் விதமான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியது நினைவிருக்கலாம். தற்போது அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!