Don't Miss!
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
என்னை கைது செய்தவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும்: விஜயசாந்தி
தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களை வெட்டிக் கொல்வேன் என்று பேசிய நடிகையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பியுமான விஜயசாந்தியை போலீசார் கைது செய்தனர். பினனர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனது கைது சம்பவம் குறித்து விஜயசாந்தி கூறுகையில்,
நான் என்ன தவறு செய்தேன்?, கொலை செய்தேனா?, கொள்ளையடித்தேனா? என்னை நடுரோட்டில் வைத்து பெண் என்றும் பாராமல் போலீசார் கைது செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நான் போலீசாருக்காக வீட்டில் காத்திருந்தேன். அப்போது எல்லாம் அவர்கள் கைது செய்ய வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து ஆந்திர முதல்வரும், உள்துறை அமைச்சரும் மவுனம் சாதித்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்காக ஆந்திர அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை நான் பாராளுமன்றத்தில் எழுப்புவேன். எனக்கு நடந்த கொடுமையைப் பற்றி பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் முக்கிய தலைவர்களிடம் கூறுவேன் என்று அவர் கூறினார்.