Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாதிட்ட விஜயக்குமாருக்கு கமிஷனர் விட்ட எச்சரிக்கை
நேற்று நடிகர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டமாக கமிஷனர் அலுவலகம் சென்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து நடிகைகள் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக முன்னணி தமிழ் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கவும், அதன் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி
மனு கொடுத்தனர்.
அப்போது ஆணையர் ராஜேந்திரனிடம் நடிகர் விஜயக்குமார் படு ஆவேசமாக, அத்தனை நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து, அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருப்பவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி, பத்திரிக்கை அலுவலகத்தையே சூறையாடி விடுவோம் என்று கோபமாக கூறினார்.
இதைக் கேட்ட கமிஷனர் ராஜேந்திரன் கோபமடைந்து, எல்லை மீறிப் பேசக் கூடாது. நீங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அந்தப் பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நீங்கள் தான் முக்கியக் காரணம் என்று கருத நேரிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அருகில் இருந்த நடிகர்கள் விஜயக்குமாரை அமைதிப்படுத்தி அங்கிருந்து வெளியேறச் செய்தனர்.