எந்திரன் கதை உரிமை விவகாரம் - டிசம்பர் 9-ம் தேதி விசாரணை!

By Shankar

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரும் எழுத்தாளர் தமிழ்நாடன் மனு மீது வரும் டிசம்பர் 9-ம் தேதி விசாரணை தொடங்குகிறது. அன்றைய தினம் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு ரோபோவுக்கு பெண் மீது காதல் வந்தால் என்ன ஆகும்? என்ற கதை முடிச்சுதான் எந்திரன் - தி ரோபோவாக வெளியானது. ஷங்கர் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இந்தப் படம் இந்தியாவின் மிக பிரமாண்ட படமாகவும், அதிக வசூலைக் குவித்த படமாகவும் திகழ்கிறது. இந்தக் கதை தன்னுடையது என்றும் எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து இதற்கு திரைக்கதை வசனம் எழுதியதாகவும் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து, அதன் கதைக்கு உரிமை கோரினார் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர். ஒரு மாதப் பத்திரிகையில் 1996-ல் இவர் எழுதிய ஜூகிபா என்ற கதைதான் எந்திரனாக படமாக்கப்பட்டது என அவர் போலீசில் புகார் செய்தார்.

ஆர்னிகா நாசர் என்பவரும் இதேபோல ஒரு புகாரைக் கிளப்பினார். பின்னர் அமைதியாகிவிட்டார்.

தமிழ்நாடன் புகாரைப் பதிவு செய்து கொண்டது காவல் துறை. ஆனால் கலாநிதி மாறனை புகாரில் சேர்க்க முடியாது என போலீஸ் மறுப்பதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீது சிவில் வழக்கு தொடர்ந்தார். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதைத் திருட்டு குறித்து இன்னொரு வழக்கையும் பதிவு செய்தார்.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு சங்கர் மற்றும் கலாநிதி மாறனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாமல் இருக்க இடைக்கால தடை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்த தடையை விலக்கி, அவர்களை ஆஜராக உத்தரவிடக்கோரி எழுத்தாளர் தமிழ்நாடன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, இனியும் கால நீட்டிப்பு தரமுடியாது. எனவே வழக்கில் ஆஜராகுமாறு கூறினார்.

ஆனால் கலாநிதிமாறன் தரப்பு மேலும் அவகாசம் கேட்டதால், ஒரு வாரம் அவகாசமளித்த நீதிபதி, வரும் 9-ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி, வழக்கை அதே தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொல்வதாகக் கூறியுள்ளார்.

எனவே, அந்தத் தேதியில் இயக்குநர் சங்கரும், கலாநிதி மாறனும் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரி வழக்குகளின் நோக்கம் செட்டில்மெண்ட்டில் முடிந்துவிடும். எந்திரன் கதை உரிமை வழக்கில் சங்கர், கலாநிதி மாறன் தரப்பு கடைசி வரை வாதாடுமா... செட்டில்மெண்டுக்கு முன்வருமா? பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X