Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சன் பிக்சர்ஸுடன் சமரசமான திரையரங்க உரிமையாளர்கள்!
சன் பிக்சர்ஸ் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ 4 கோடி குறித்து வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதென தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையில், இருதரப்புக்கும் ஒப்பந்தமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களால் தடை அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாவதில் நீடித்த சிக்கல் விலகியது.
முன்னதாக, "எங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை சன் பிக்சர்ஸ் கொடுக்காததால், அந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் படங்களுக்கும், சன் டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெறும் படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை'' என்று திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 'ஒஸ்தி', மம்பட்டியான் படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் நேற்று தீர்ந்தது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திரையரங்க உரிமையாளர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் உள்ள பிரச்சினை குறித்து, ஜனவரி 31-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முழு ஒத்துழைப்பை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உறுதி தரப்பட்டது. எனவே ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக முழு ஒத்துழைப்பு தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்று கூறப்பட்டுள்ளது.