Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சன் பிக்சர்ஸுடன் சமரசமான திரையரங்க உரிமையாளர்கள்!
சன் பிக்சர்ஸ் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ 4 கோடி குறித்து வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதென தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையில், இருதரப்புக்கும் ஒப்பந்தமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களால் தடை அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாவதில் நீடித்த சிக்கல் விலகியது.
முன்னதாக, "எங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை சன் பிக்சர்ஸ் கொடுக்காததால், அந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் படங்களுக்கும், சன் டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெறும் படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை'' என்று திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 'ஒஸ்தி', மம்பட்டியான் படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் நேற்று தீர்ந்தது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திரையரங்க உரிமையாளர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் உள்ள பிரச்சினை குறித்து, ஜனவரி 31-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முழு ஒத்துழைப்பை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உறுதி தரப்பட்டது. எனவே ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக முழு ஒத்துழைப்பு தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்று கூறப்பட்டுள்ளது.