Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலையாள நடிகர் முரளி மரணம்!
நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட முரளியின் உடல் உறுப்புகள் சில தினங்களுக்கு முன் செயல் இழந்ததால் அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
தங்களால் முடிந்த அளவு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் நேற்று இரவு அவர் உடல் நிலை மோசமடைந்து இறந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகரான முரளி, தமிழில் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு டும்டும்டும், பொல்லாதவன், ஜூட் படங்களிலும் நடித்தார் முரளி.
சமீபத்தில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வந்தார்.
மலையாளத்தில் முரளியின் படங்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றவை. பிரபல மலையாள இயக்குநர் அரவிந்தன் இயக்கிய சிதம்பரம் படத்தில் அறிமுகமான முரளிக்கு, 2002-ம் ஆண்டு, நெய்துக்காரன் படத்துக்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதரம், கனாகினவு, தாளோலம், நெய்துக்காரன் மற்றும் அமரம் படங்களுக்காக மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்த முரளி, தீவிரமான மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்.
முரளியின் மறைவு கேரள திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவனந்தபுரம் விஜேடி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினரும் பொதுமக்களும் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 45 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து லேஹித்தாஸ், ராஜன் பி தேவ் மற்றும் முரளி ஆகிய மூன்று முக்கிய கலைஞர்களை இழந்துள்ளது தென்னிந்திய திரையுலகம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!