Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மலையாள நடிகர் முரளி மரணம்!
நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட முரளியின் உடல் உறுப்புகள் சில தினங்களுக்கு முன் செயல் இழந்ததால் அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
தங்களால் முடிந்த அளவு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் நேற்று இரவு அவர் உடல் நிலை மோசமடைந்து இறந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகரான முரளி, தமிழில் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு டும்டும்டும், பொல்லாதவன், ஜூட் படங்களிலும் நடித்தார் முரளி.
சமீபத்தில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வந்தார்.
மலையாளத்தில் முரளியின் படங்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றவை. பிரபல மலையாள இயக்குநர் அரவிந்தன் இயக்கிய சிதம்பரம் படத்தில் அறிமுகமான முரளிக்கு, 2002-ம் ஆண்டு, நெய்துக்காரன் படத்துக்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதரம், கனாகினவு, தாளோலம், நெய்துக்காரன் மற்றும் அமரம் படங்களுக்காக மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்த முரளி, தீவிரமான மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்.
முரளியின் மறைவு கேரள திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவனந்தபுரம் விஜேடி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினரும் பொதுமக்களும் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 45 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து லேஹித்தாஸ், ராஜன் பி தேவ் மற்றும் முரளி ஆகிய மூன்று முக்கிய கலைஞர்களை இழந்துள்ளது தென்னிந்திய திரையுலகம்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?