விசாரணைக்கு வராவிட்டால்.. ரஞ்சிதாவுக்கு போலீஸ் எச்சரிக்கை

நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியே நடிகை ரஞ்சிதாதான். அவரை விசாரணைக்கு நேரில் வருமாறு சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி விசாரணைக்கு ஆஜராவதாக அவரும் பதில் கூறினாலும், இதுவரை வராமல் போக்குக் காட்டி வருகிறார்.
இந் நிலையில் ரஞ்சிதாவை விசாரணைக்கு வரவழைக்க போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோர்ட்டில் பிடிவாரண்ட் உத்தரவு பெற்று அவரை கைது செய்வது குறித்து கர்நாடக சிஐடி போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி. சரண் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வழக்கின் முக்கிய சாட்சியான நடிகை ரஞ்சிதாவுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினோம். ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. நடிகை ரஞ்சிதா கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











