Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுயம்வரம் மூலம் தேர்வு செய்த டிம்பிளை மணந்தார் ராகுல் மகாஜன்
ராகுல் மகாஜன் தனது காதல் மனைவி ஷ்வேதா சிங்கை, தந்தை மறைந்த சில மாதங்களில் விவாகரத்து செய்தார். இதையடுத்து சமீபத்தில் என்டிடிவி இமேஜின் மூலம் சுயம்வரம் ஒன்றை நடத்தினார்.
இதன் இறுதிப் போட்டியில், 21 வயதான டிம்பிள், 20 வயதான ஹர்பிரீத் சப்ரா, 25 வயதான நிகுஞ்ச் மாலிக் ஆகியோர் தேர்வாகினர்.
இவர்களில் டிம்பிளை தனது வாழ்க்கைத் துணைவியாக தேர்வு செய்தார் ராகுல்.
இதையடுத்து அவரை மணந்து கொண்டார் ராகுல் மகாஜன். பிரமோத் மகாஜனை சுட்டுக் கொன்ற அவரது தம்பி பிரவீன் மகாஜன் சமீபத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதைப் பொருட்படுத்தாமல் தனது கல்யாணத்தை முடித்துக் கொண்டிருக்கிறார் ராகுல்.
மும்பையில் உள்ள லீலா கெம்பின்ஸ்கி ஹோட்டலில் மிகப் பிரமாண்ட முறையில், ஆடம்பரமாக திருமணம் நடந்தது. ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு ராகுல் - டிம்பிள் ஜோடியை வாழ்த்தினர்.
இதன் மூலம் ராகுலின் வாழ்க்கையில் 2வது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.