Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விமானத்தில் வந்த நடிகை ரோஜாவிடம் ரூ 2.5 லட்சம் திருட்டு
பிரபல நடிகை கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஒத்தப்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் வந்தார்.
இரவு 8-40 மணி அளவில் அந்த விமானம் கோவை வந்தது. விமானத்தில் இருந்து இறங்கும்போது, ரோஜா தன்னுடைய கைப்பையைத் தேடினார். அதில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பணம் வைத்திருந்தார். அந்தப் பை காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா, விமானநிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணப்பை திருட்டுப்போன தகவலை தெரிவித்தார். மேலும் தனியார் விமான நிறுவனத்தின் மேலாளரிடமும் இதுகுறித்து புகார் மனு எழுதிக்கொடுத்தார்.
பின்னர் நடிகை ரோஜா, கார் மூலம் கேரள மாநிலம் ஒத்தப்பாலத்துக்கு புறப்பட்டு சென்றார். ரோஜாவிடம் பணம் திருட்டுப்போனது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
திருட்டுப் போன பணப்பை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.