Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காத்திருந்த செய்தியாளர்கள்- 'எஸ்' ஆன சத்யராஜ்!
நடிகர் சூர்யா, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் ஈனப் பிறவிகள் என்று சாடினார். ஆனால் பின்னர் நான் எல்லோரையும் சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.
விவேக் என்ற நடிகர், மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசினார். பத்திரிகையாளர்களின் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை அனைவரது படங்களுக்கும் பிரா ஜட்டி மாட்டி சென்னை மாநகர சுவர்களில் போஸ்டராக ஒட்டுவேன் என்று முழங்கினார். லிஸ்ட் போட்ட பத்திரிகை தவிர, மற்றவர்களையும் தாறுமாறாகப் பேசினார்.
நடிகை ஸ்ரீபிரியா 'பாஸ்டர்ட்ஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களைத் திட்டித் தீர்த்தார்.
அவருக்குப் பின் பேச வந்த சத்யராஜ், விவேக்-ஸ்ரீபிரியா பேசியதை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், சின்ன ஜட்டி - பிரா வாங்கித் தருகிறேன், அதை வேண்டுமானால் மாட்டி விடுங்கள் பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு என்றும் ஆபாசத்தின் உச்சத்தில் நின்று ஆட்டம் போட்டார்.
இப்போது நிலைமை மாறி விட்டது. சாமியாருடன் நடிகை ரஞ்சிதா கொஞ்சிக் குலாவிய காட்சிகளை உலகமே பார்த்து பரபரப்பானது.
நடிகைகள் இந்த மாதிரி பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு சட்ட உதவி செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பதாக மார்தட்டிய திரையுலகினர் ரஞ்சிதா விவகாரத்தில் சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர்.
குறிப்பாக சத்யராஜ்... கடந்த வாரம் அவர் நடித்த ஒரு படத்தின் பிரஸ் மீட். அவர்தான் நிருபர்களைச் சந்தித்து பேட்டியளிப்பதாக இருந்தது. ஆனால் ரஞ்சிதா விவகாரம் வெளியாகி சினிமா நடிகைகளின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைத்துவிட, இது பற்றி சத்யராஜிடம் கட்டாயம் கேள்வி எழுப்பியே தீர வேண்டும்... சின்ன பிரா ஜட்டி அவருக்கு கிடைத்துவிட்டதா... அதை இனி யாருக்கு மாட்டி விடப் போகிறார்? போன்ற கேள்விகளோடு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால் விஷயம் முன்கூட்டியே அவருக்குச் சொல்லப்பட்டு விட, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கே வராமல் எஸ்கேப் ஆகி விட்டார் சத்யராஜ்.