Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி?
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் வெளியீட்டு உரிமை தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கொடுத்த ரூ 83 லட்சம் மோசடி புகாரில் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு நீதிமன்றம் வழங்கிய போலீஸ் காவல் இன்று மாலை 4.15 மணிக்கு முடிகிறது. இதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
சக்சேனா மீது மேலும் சில புகார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேலும் விசாரிக்க இந்த காவல் நீட்டிப்பை போலீசார் கோரவுள்ளார்களாம்.
இன்னொரு பக்கம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அவர் தந்தையும் சக்ஸேனாவை எப்படியாவது குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்வதாகவும், இந்தக் கைதுக்கு காரணமான சேலம் விநியோகஸ்தர் செல்வராஜை இயக்குவதே அவர்கள்தான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சக்சேனா விவகாரத்தில் சன் குழுமம் இதுவரை பகிரங்கமாக எந்த விளக்கமும் வெளியிடாமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது!