Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி?
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் வெளியீட்டு உரிமை தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கொடுத்த ரூ 83 லட்சம் மோசடி புகாரில் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு நீதிமன்றம் வழங்கிய போலீஸ் காவல் இன்று மாலை 4.15 மணிக்கு முடிகிறது. இதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
சக்சேனா மீது மேலும் சில புகார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேலும் விசாரிக்க இந்த காவல் நீட்டிப்பை போலீசார் கோரவுள்ளார்களாம்.
இன்னொரு பக்கம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அவர் தந்தையும் சக்ஸேனாவை எப்படியாவது குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்வதாகவும், இந்தக் கைதுக்கு காரணமான சேலம் விநியோகஸ்தர் செல்வராஜை இயக்குவதே அவர்கள்தான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சக்சேனா விவகாரத்தில் சன் குழுமம் இதுவரை பகிரங்கமாக எந்த விளக்கமும் வெளியிடாமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது!