twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாரூக் கான் செக்யூரிட்டிக்கு ஆயுள் தண்டனை!

    By Staff
    |

    Shahrukh Khan
    மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மெய்க்காப்பாளர் யதீந்திர சௌஹானுக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    கடந்த ஆக்ஸ்ட் 16, 2006-ம் ஆண்டு மும்பையில் தனது சக ஊழியர் சந்திர பிரதாப் சிங்கை சுட்டுக் கொன்றார் யதீந்திர சௌஹான். ஷாரூக்கானின் மும்பை இல்லமான 'மன்னத்'துக்கு வெளியில்தான் இந்த கொலை நடந்தது. ஷாரூக்கும் அப்போது வீட்டுக்குள்தான் இருந்தாராம்.

    டாப்ஸ் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றினார் யதீந்திர சௌஹான். ஷாரூக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு தவிர, இந்த தனியார் நிறுவன செக்யூரிட்டியும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் ஒருவர்தான் ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு ஊழியர்.

    சம்பவத்தன்று, யதீந்தர் தனது நாற்காலியிலேயே தூங்கி விட்டாராம். அப்போது வீட்டு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்து சந்திரபிரதாப் சிங், "இப்படி வெட்டியாகத் தூங்குகிறாயே... நீ வைத்திருக்கும் துப்பாக்கி துருப்பிடித்துவிடப் போகிறது. அதற்கும் வேலை கொடு" என்று மிகக் கேவலமாகப் பேசிவிட்டாராம்.

    அந்த ஆத்திரத்தில் துப்பாக்கியால் சிங்கை நோக்கி சுட்டுவிட்டு, 'இப்போ தெரியுதா என் துப்பாக்கி எப்படி வேலை செய்யுதுன்னு" என சினிமா பாணியில் பேசினாராம். சம்பவ இடத்திலேயே சிங் இறந்துவிட்டார்.

    இதையே கோர்ட்டிலும் சொல்லியுள்ளார் சௌஹான். தன் கட்சிக்காரருக்கு கொலை செய்யும் நோக்கம் கிடையாது என்றும், யதேச்சையாக நடந்தது இது என்றும் சௌஹானின் வக்கீல் வாதாடிப் பார்த்தார்.

    ஆனால் இதை ஏற்காத நீதிபதிகள், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ள ஒருவருக்கு அது எத்தகைய ஆபத்தான ஆயுதம் என்று தெரியும். பின் விளைவுகளைத் தெரிந்து கொண்டே இந்த கொலையைச் செய்துள்ள சௌஹானுக்கு ஆயுள் தண்டனைதான் சரியானது என தீர்ப்பளித்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X