Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய வழக்கில் சக்சேனாவுக்கு 15 நாள் காவல்!
சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் சினிமா வினியோகஸ்தர். இவருக்கு தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமை தருவதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கூறி ரூ.1.25 கோடியை வாங்கிக் கொண்டு, வினியோக உரிமையை தராமல் ஏமாற்றியதாக கூறினார்.
இதனையடுத்து சக்சேனா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சண்முகவேல் என்ற பட வினியோகஸ்தர், தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தின் வினியோகம் தொடர்பாக சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும், அறையில் சிறை வைத்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்ததாகவும், கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இதைதொடர்ந்து புதிய வழக்கில் நீதிமன்ற காவலுக்காக சக்சேனவை இன்று (8-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
எனவே சக்சேனவை மாஜிஸ்திரேட்டு முன்பு இன்று மாலை ஆஜர்படுத்தினர். இதில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.