Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் முரளி உடலுக்கு ரஜினி,திரையுலகினர் அஞ்சலி-நாளை தகனம்-படப்பிடிப்புகள் ரத்து
நடிகர் முரளி இன்று அதிகாலையில், மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவால் தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடிகர் ரஜினிகாந்த் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், சூர்யா, சிவக்குமார், ஆனந்த்பாபு உள்ளிட்டோரும், இயக்குநர் சேரன் உள்ளிட்டோரும் நேரில் வந்து முரளி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முரளியின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல்தகனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளியின் மறைவையொட்டி நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் அறிவித்துள்ளார்.