Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
அம்பேத்கர் படம்: தமிழக அரசு மீது வழக்கு!
டாக்டர் அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிடுவது தொடர்பாக தமிழக அரசு மீது அதன் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையை சேர்ந்த விஸ்வாஸ் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட சட்ட மேதை அம்பேத்கரின் சினிமா படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை மாநிலத்தில் வெளியிடுவதற்கு நான் வினியோக உரிமை பெற்றுள்ளேன்.
அதே நேரம் படத்திற்கான மொழி மாற்றம், ஊடக விளம்பரம் மற்றும் எடிட்டிங் பணிகளுக்கு ரூ.90 லட்சம் வரை செலவாகும். எனவே தமிழக அரசு ரூ.60 லட்சமும், புதுவை அரசு ரூ.30 லட்சமும் நிதி உதவி கொடுத்தால் படத்தை விரைவில் வெளியிட முடியும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நாளை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வருகிறது.