வரி ஏய்ப்பு: மும்பை விமான நிலையத்தில் ஏக்தா கபூரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை

பாங்காக்கிலிருந்து மும்பை திரும்பிய அவரிடம் வரி செலுத்தப்படாத ரூ 90 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், அவரைத் தடுத்து, 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் எந்தக் கேள்விக்கும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மும்பை விமான நிலையத்தில் பிரபலங்கள் வரிகட்டாத பொருளுடன் வந்து மாட்டிக் கொள்வது இது முதல்முறை அல்ல. அனுஷ்கா சர்மா, பிபாஷா பாசு, மின்னிஷா லம்பா ஆகியோர் சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருள்களுடன் வந்து மாட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications