Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தலித் மக்களுக்கு எதிரான படம்: அமிதாப் நடித்த 'ஆராக்ஷனு'க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஆராக்ஷன் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
பிரகாஷ் ஜா தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்த எதிர்மறையான படமாக ஆராக்ஷன் வந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் இன்னமும் பல்வேறு கொடுமைகளை எதிர்நோக்கி வரும் தலித் மக்களுக்கு எதிரான படமாக ஆராக்ஷன் பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் சமூக அமைதியைக் கெடுக்கும், ஒடுக்கப்பட்ட இன மக்களை மேலும் பின்னிலைக்குத் தள்ளும் என்பதால் படத்தைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியா முழுக்க வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இந்தப் படம் தொடர்பான விளம்பரங்களை உத்திரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் தடை கோரப்பட்டுள்ளது.