தியேட்டர்களில் பார்... நோ சொன்ன முதல்வர்!
திரையரங்குகளில் பார்வைக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினருக்கு, அதிர்ச்சி தரும் வகையில் அனுமதி மறுத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
இந்த பார் கோரிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் கடும் ஆட்சபணை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், திரைப்பட சலுகைகள் சீரமைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன், திரையரங்குகளில் கட்டாயம் பார் வைக்க அனுமதிக்கக் கூடாது. திரையரங்க வளாகத்தைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மதுக்கடைகளும் இருக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திரையரங்குகளில் மது மற்றும் பார்களுக்கு அனுமதி கிடையாது என முதல்வர் முடிவெடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்திய செய்தி விளம்பரத் துறை, விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











