சீமான் - விஜய் 3 மணிநேரம் பேச்சு!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க 'பகலவன்' என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கும் மேல் இது வெறும் பத்திரிகைச் செய்தியாகவே இருந்தது. விஜய் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
இடையில் ஜெயம் ராஜா, ஷங்கர், முருகதாஸ், கவுதம் மேனன், ஏ எல் விஜய் என முன்னணி இயக்குநர்கள் அனைவருக்குமே கால்ஷீட் கொடுத்துவிட்டார் விஜய்.
எனவே சீமானின் பகலவன் அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு வந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு தண்டனையை நிறுத்தும் போராட்டங்களில் மும்முரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யைச் சந்தித்தார்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.
விஜய்க்குப் பிடித்த மாதிரி பகலவனின் கிளைமாக்ஸ் காட்சியை சீமான் மாற்றி எழுதியதால், அந்தக் கதையை உடனடியாகப் படமாக்குவதில் ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். தயாரிப்பாளர் தாணுவும் இதில் உறுதியாக இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசவே சீமானும் விஜய்யும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே 'பகலவன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் " என்கிறார்கள் தாணு தரப்பில்.


Click it and Unblock the Notifications











