இலங்கையில் இந்திய படங்களை வெளியிட எதிர்ப்பு
கண்டி: தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்தையும் இலங்கையில் தடை செய்ய வேண்டும் என சிங்கள தீவிரவாத அமைப்பினர் கண்டி மற்றும் இதர பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
தென்னிந்திய மொழிப்படங்களை எடுப்பவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளின் ஆகரவாளர்கள் என்றும், இவர்களது படங்களை இலங்கையில் வெளியிட மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இந்தப் போஸ்டர்களில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் சிங்கள ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்கக் கொடுக்கும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போவதாகவும் அந்த போஸ்டர் வாசகங்கள் கூறுகின்றன.
கண்டி நகரின் கடைவீதி, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications