twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்னேகா கொடும்பாவி எரிப்பு-நாமக்கல்லில் இ.ம.க போராட்டம்

    By Staff
    |

    Sneha
    திருவண்ணாமலையில் நடிகை ஸ்னேகா செருப்பு அணிந்து கிரிவலம் போனதை கண்டித்து நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.

    சர்ச்சைகளை சினிமா நடிகைகளின் நிழல் என்றே சொல்லலாம். வெளிச்சத்துக்கு வந்துவிட்டால் அது அவர்களை விட்டு எளிதில் பிரிவதில்லை. சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல் இருந்து வரும் ஸ்னேகா அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

    பெங்களூர் தொழிலதிபர் ஒருவர் திருமண எஸ்எம்எஸ் அனுப்பிய பிரச்சனை ஒரு வழியாக முடிந்தநிலையில் தற்போது செருப்பு அணிந்து அடுத்த சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

    சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்ற இவர் காலில் செருப்பு அணிந்து சென்றார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் அவருக்கு செருப்புகளை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், ஸ்னேகா தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால். வெறும் காலுடன் நடக்க முடியாது. அதனால் துணி செருப்பு போட்டு நடந்தேன் என விளக்கம் கொடுத்தார். இதை அடுத்து அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆனால், இந்த விளக்கம் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவினரை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பதட்டம் ஏற்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X