Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார்
திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்திசிதம்பரம் சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மீதும், அவரது அண்ணன் மகன் தினகரன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். 'எந்திரன்' படம் விநியோகத்தில் தினகரன் தன்னுடன் பங்குதாரராக செயல்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் கணக்குவழக்குகளை ஒப்படைக்காமல் மோசடி செய்துவிட்டார் என்றும், திருவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அபகரித்துவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பதில் புகார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில் அதிபர் வி.எஸ்.ஜே.தினகரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், 'எந்திரன்' படம் வெளியிட்டதில் படஅதிபர் சக்திசிதம்பரம்தான், எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக 'காவலன்' படம் விநியோக உரிமையை தருவதாக கூறினார் என்றும், பின்னர் காவலன்' படம் விநியோக உரிமையை தரவில்லை என்றும், சக்திசிதம்பரத்திடமிருந்து ரூ.1 கோடியே 60 லட்சத்தை வசூலித்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவள்ளூரில் நிலம் வாங்கியதில் எனக்கு சம்பந்தமும் இல்லை என்றும், எனது புகழை கெடுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும் மனுவில் தினகரன் தெரிவித்துள்ளார்.