Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காங்கிரஸ் சார்பில் சுரேஷ் கோபி போட்டியா?
மலையாளம் மர்றும் தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ்கோபி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காரின் மீது சிவப்பு விளக்கு சுற்றி வர, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக என்னைப் பார்க்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் அதுபோன்ற வேடங்கள் பலவற்றில் நடித்து என் தந்தை கண்குளிரப் பார்க்கச் செய்துவிட்டேன்.
நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அடிமையாவதை விரும்பவில்லை நான். எனக்கு பிடித்த தொழில் சினிமாதான். அது போதும்.
தேர்தலில் ஓட்டுப் போடக்கூட நான் இங்கு இருக்கமாட்டேன். நான் எங்கே தேர்தலில் நிற்பது...
காங்கிரஸில் சிதம்பரம், மன்மோகன் சிங் இருவரையும் எனக்குப் பிடிக்கும். இந்த இருவரும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்.
அதே போல தலைவர்களில் இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனை எனக்குப் பிடிக்கும், என்றார் சுரேஷ் கோபி.