செக் மோசடி வழக்கு-நாங்குநேரி கோர்ட்டில் டிவி நடிகை ஸ்வேதா ஆஜர்
நாங்குநேரி: செக் திரும்பி வந்த வழக்கில் டிவி நடிகை ஸ்வேதா நாங்குநேரி கோர்ட்டில் ஆஜரானார்.
நாங்குநேரி அருகே உள்ள சங்கனாங்குளத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரிடம் டிவி நடிகை ஸ்வேதா கடந்த ஆண்டு 2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
கடனை திருப்பி கொடுப்பதற்காக ரூ.2 லட்சத்திற்கான செக்கை ஸ்வேதா முத்தையாவிடம் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது.
இதையடுத்து முத்தையா நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகை ஸ்வேதா நேற்று கோர்ட்டில் ஆஜாரானார்.
நடிகை ஸ்வேதா ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவற்றில் இளவரசி, மகள் ஆகியவை முக்கியமானவையாகும்.
More from Filmibeat
செக் மோசடிவழக்கு டிவி நடிகை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜரான டிவி நடிகை ஸ்வேதா cheque fraud case tv actress appears in nanguneri court tv actress swetha


Click it and Unblock the Notifications











