Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிற்பட்ட மக்களை மேம்படுத்தியது சினிமா! - வாலி
புதுச்சேரியில் நடந்த கம்பன் விழாவில், கம்பன் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவித்த மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து அவர் பேசியது:
சினிமா ஒரு வலிமையான சாதனம். அதை குறை சொல்ல வேண்டியதில்லை. சினிமாவில் இருப்பவர்களை ஏளனமாக சிலர் பார்ப்பதும், விமர்சிப்பதும் அறிந்ததுதான். இங்கே கூட சிலர் சினிமா குறித்துப் பேசினார்கள்.
20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பெரியார் மட்டுமில்லாமல் நாடகத்தையும், எழுத்தையும் வலிமை மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தியவர் அண்ணா.
சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் வசனங்களை சினிமாவில் அண்ணாவும் கருணாநிதியும் பயன்படுத்தினர். சினிமா இல்லாமலிருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பிற்பட்ட மக்கள் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்க முடியாது.
சினிமாவுக்கு அப்பாலும் எனக்கு ஒரு முகம் இருக்கிறது. சினிமாவுக்குப் பாட்டு எழுதியவர்களில் என்னுடன், உடுமலை நாராயணக்கவி, கண்ணதாசன் ஆகியோர் கம்பன் விழாக்களிலும் பங்கேற்றுள்ளோம்..." என்றார்.