Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
முதல் கணவர் ஆகாஷ் மீது போலீசில் வனிதா புகார்!
நடிகர் விஜயகுமார் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.
வனிதா கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், மஞ்சுளா, அருண்விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை போலீஸ். விஜயகுமாரும் மஞ்சுளாவும் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். விஜயகுமார் மீது வனிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந் நிலையில் வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ், திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் வந்தார். வனிதா பொய்யான தகவல்களை கூறி வருகிறார். விஜய்ஸ்ரீஹரி என்னுடன் இருப்பதற்குதான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்று கூறினார்.
ஆனால் நேற்று மாலையில் வனிதா திடீரென நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். தனது முதல் கணவர் ஆகாஷிடமிருந்து மகன் விஜய் ஸ்ரீஹரியை மீட்டுத் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆகாஷின் நண்பர் ஒருவர் மீதும் வனிதா புகார் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆகாஷிடமிருந்து மகனை பறிக்க முயன்றால் உனது குழந்தைகளை கடத்திச் சென்றுவிடுவோம் என்று ஆகாஷின் நண்பர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.