'போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்': விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்

சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழர்களை கொன்று குவித்து கொடிய போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று இப்போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திப தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அடுத்த கட்ட போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
More from Filmibeat
vijay fans vijay rajapakse war crime srilanka ராஜபக்சே போர்க்குற்றவாளி இலங்கை தமிழர்கள் விஜய் ரசிகர்கள் விஜய்


Click it and Unblock the Notifications











