Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் தல்லி தெலுங்கானாவை தொடங்க நேரிடும் - விஜயசாந்தி எச்சரிக்கை
ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் விஜயசாந்தி. பின்னர் அதிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
அதன் பின்னர் அக்கட்சியை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்தார். இக்கட்சியின் சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் மேடக் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியை விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பின.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார் விஜயசாந்தி. தன்னை கட்சியை விட்டு விரட்ட சில தலைவர்கள் முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதல்வரைச் சந்தித்த பின்னர்தான் எனக்கு எதிராக கட்சிக்குள் சிலர் சதித் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர்.
நான் முதல்வரை சந்திக்கப் போவதையும், எதற்காக சந்திக்கப் போகிறேன் என்பதையும் ஏற்கனவே கட்சித் தலைவர் சந்திரசேகர ராவிடம் விளக்கிக் கூறியிருந்தேன்.
ஆனால் கட்சிக்குள் உள்ள சிலர் எனக்கு எதிராக கட்சித் தலைமையிடம் தவறான தகவல்களைக் கொடுத்து கட்சியை விட்டு என்னை நீக்க முயற்சித்து வருகின்றனர்.
நான் செய்ததிலோ அல்லது பேசியதிலோ எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.
எனது சேவையை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது. மேலும், என்னை ஜாதி அடிப்படையில் கட்சித் தலைவர்கள் பாரபட்சமாக நடத்தி வருகின்றனர்.
நானாகவே கட்சியை விட்டு விலக வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்கள். என்னை தொடர்ந்து புறக்கணித்தால் மீண்டும் தல்லி தெலுங்கானா கட்சியை தொடங்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.