Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் தல்லி தெலுங்கானாவை தொடங்க நேரிடும் - விஜயசாந்தி எச்சரிக்கை
ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் விஜயசாந்தி. பின்னர் அதிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
அதன் பின்னர் அக்கட்சியை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்தார். இக்கட்சியின் சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் மேடக் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியை விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பின.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார் விஜயசாந்தி. தன்னை கட்சியை விட்டு விரட்ட சில தலைவர்கள் முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதல்வரைச் சந்தித்த பின்னர்தான் எனக்கு எதிராக கட்சிக்குள் சிலர் சதித் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர்.
நான் முதல்வரை சந்திக்கப் போவதையும், எதற்காக சந்திக்கப் போகிறேன் என்பதையும் ஏற்கனவே கட்சித் தலைவர் சந்திரசேகர ராவிடம் விளக்கிக் கூறியிருந்தேன்.
ஆனால் கட்சிக்குள் உள்ள சிலர் எனக்கு எதிராக கட்சித் தலைமையிடம் தவறான தகவல்களைக் கொடுத்து கட்சியை விட்டு என்னை நீக்க முயற்சித்து வருகின்றனர்.
நான் செய்ததிலோ அல்லது பேசியதிலோ எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.
எனது சேவையை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது. மேலும், என்னை ஜாதி அடிப்படையில் கட்சித் தலைவர்கள் பாரபட்சமாக நடத்தி வருகின்றனர்.
நானாகவே கட்சியை விட்டு விலக வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்கள். என்னை தொடர்ந்து புறக்கணித்தால் மீண்டும் தல்லி தெலுங்கானா கட்சியை தொடங்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!