Don't Miss!
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்!
Recommended Video
சென்னை : வசூலில் உலகம் முழுவதும் பல புதிய சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்.
'பாகுபலி' படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார்.
'மெர்சல்' படத்திற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ராகவா லாரன்ஸ் படத்துக்கு
இந்தப் படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாக இருக்கிறது.
தமிழிலும் வெளியாகும்
லாரன்ஸ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மகாதேவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
மதன் கார்க்கி வசனம்
தமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.
1 கோடி சம்பளம்
இந்தப் படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.